ஈழத்துத் தமிழ்க் கவிதைகளின் தனித்துவம்: சேரனின் கவிதைகளை முன்வைத்து ஓர் ஆய்வு


-தருமராசா அஜந்தகுமார்

1.ஈழத்துத் தமிழ்க்கவிதைகளின் தனித்துவம் ஓர் அறிமுகம் 

தமிழ்க்கவிதைக்கென்றொரு செழுமையான பாரம்பரியம் இன்று வரை நிலைத்தும் தொடர்ந்தும் வருகின்றது. இதில் ஈழத்துத் தமிழ்க்கவிதைகளின் வகிபாகம்  தனித்துவமானது. ஈழத்துப் பூதந்தேவனாரில் இருந்து இன்றுவரை ஈழத்துத் தமிழ்க்கவிதைக்கென்றொரு பாரம்பரியம் இருக்கிறது.  தமிழக இலக்கியத் தடத்தோடு  இணைந்தும் தொடர்ந்தும் வந்த ஈழத்துத் தமிழ்க் கவிதை மரபு 1950 களில் பேச்சோசைப்பண்பினைப் பெற்றதில் இருந்து புதிய திருப்பத்தைக் காண்கின்றது.  முற்றிலுமான தனித்துவப் போக்கு 1980 களின் பின்பே உருவாகத்தொடங்கியது. 1980களில் இருந்து இலங்கையில் வலுப்பெற்ற இன முரண்பாடுகளும்இ மோதல்களும்இ அகதிவாழ்வும்  மரணத்துள் வாழும் சூழலும் தமிழக அனுபவங்களைக் கடந்த புதிய அனுபவத்தளங்களை பாடுபொருள்களை ஈழத்து இலக்கியத்திற்கு அளித்தது. இவ்வாறாக வாய்த்தஇ புதிய சமூகஅனுபவத்தை மிக உக்கிரமாக ஈழத்துத் தமிழ்க்கவிதை வெளிப்படுத்தியது. ஆபிரிக்கஇ தென்அமெரிக்கஇ பலஸ்தீன மொழிகளுக்கு பிறகு தமிழில் வேறெங்கும் வாய்க்காத இரத்தமும் சதையுமான அனுபவங்கள் ஈழத்துக் கவிதைகளில்தான் உணர்வுபூர்வமாக வெளிப்படத் தொடங்கின. தமிழரின் நசிக்கப்பட்ட குரல்வளைகளில் இருந்து எதிர்ப்பு குரல்களும்இ வலிகளும்இ உருவ உள்ளடக்க புதுமையுடனும்இ உறையவைக்கும் படிமங்களுடனும் வெளிப்பட்டு ஈழத்து தமிழ் கவிதை செழிப்புறத் தொடங்கியது. எண்பதுகளில் இருந்து செழிப்புற்ற தமிழ்கவிதையின் மையப்புள்ளியாக இருந்த சேரனின் கவிதைப் பங்களிப்பை தனித்துவத்தை மதிப்பிடுவதாகவே இக்கட்டுரை அமைகிறது.

2. சேரனின் கவிதைகள் ஓர் அறிமுகம்

சேரன் ஈழத்து நவீன தமிழ்க்கவிதையின் பிதாமகரான மஹாகவியின் மகன். இரண்டாவது சூரிய உதயம் (1983) யமன் (1984) கானல்வரி (1989) எலும்புக்கூடுகளின் ஊர்வலம் (1990) எரிந்து கொண்டிருக்கும் நேரம் (1993) “நீ இப்போதும் இறங்கும் ஆறு - சேரன் கவிதைகள் ஒரு நூறு” (2000). “மீண்டும் கடலுக்கு” (2004) என்று இவரது ஏழு கவித்தொகைகள் வெளிவந்திருக்கின்றன. சேரன் 1975இல் எழுதத் தொடங்கி இன்றைய ‘அலைந்துழல்வு’ வாழ்க்கை வரையும் தொடர்ந்து இயங்கிவருபவர்.  மஹாகவியூடாக நுஃமான்இ சண்முகம் சிவலிங்கம் என்று தொடரும் ஒரு கவிதைப்பாரம்பரியத்தின் முக்கிய பிரதிநிதிதான் சேரன். 1980 களுக்குப்பிறகு கிளைத்த இன ஒடுக்குமுறையின் வன்முறைஇ வன்முறைக்கெதிரான போர்க்குரல்இ புலம்பெயர்வு அனுபவங்கள் என்ற தளங்களில் சேரனின் கவிதைகள் இபரிணாமம் அடைந்தபடி மிகத்தீவிரமாகப் பயணிக்கின்றன. இவற்றில் புரட்சியும் காதலும் மனிதநேயமும் மாறி மாறிப் பயணித்துக் கொண்டிருக்கின்றன.

3.  சேரனின் கவிதைகளின் உள்ளடக்கமும் வெளிப்பாடும்

சேரனின் கவிதைகளின் பாடுபொருளினை
1.    இனமுரண்பாட்டினாலும் வன்முறையினாலும் எதிர்ப்புக்குரலாயும் சுயவிமர்சனங்களாகவும் எழுகின்ற கவிதைகள்

2.    காதல்  காமம் என்ற புதிர்ப்பாதைகளில் பயணிக்கும் கவிதைகள்

3.    சமூகப் பிரச்சினைகளை மிகத் தீர்க்கத்தோடு அணுகும் கவிதைகள்

4.    புலம்பெயர் அனுபவங்களைப் பதிவு செய்யும் கவிதைகள் 
என்று மிக மேலோட்டமாக நாம் வகைபிரித்துக் கொள்ளலாம்.

3.1. சேரனின் கவிதைகளில் இன ஒடுக்குமுறையும் எதிர்ப்புக் குரலும் :

இன ஒடுக்குமுறைச் சூழலில் இருந்து முகிழ்த்த தலைமுறைக் கவிஞனே சேரன். இனவாதத்தின் கொடுமைகளை 1983இன் கலவரங்களை அதன்வழி கிளைத்த புரட்சியின் குரல்களை மரணத்தின் வாதைகளை வலிகளை போராட்டத்தின் மீதான விமர்சனங்களை மிகக் கலாபூர்வமாக வெளிப்படுத்தியதால் சேரன் மிக முக்கியமானவர்.  ‘எனது நிலம்! எனது நிலம்’ என்று ஓங்கி ஒலித்த இ சேரனின் கவிக்குரல்:  நகரம் எரிக்கப்பட்டதும் மக்கள் முகங்களை இழந்ததும்இ நிலத்திலும் காற்றிலும் கூட அந்நியப்பதிவு சுவறியதும்இ ‘சாம்பல் பூத்த தெருக்களில் இருந்துஃ எழுந்து வருக’1 என்றும்  ‘தெருவில் எமது ஃதலைவிதி உள்ளதை ஃ நெருப்பிலே எமது நாட்கள் நகர்வதை ஃஅனுமதிக்கிறாயா? ஃ ‘இல்லை….’ ஃ எழுந்து வெளியில் வாஃ தெருவில் இறங்கு’2  என்றும் போருக்கான புரட்சிக் குரலைச் சேரனிடம்  கேட்கிறோம். மரணத்தின் வேலிக்குள் வாழ்க்கை அகப்பட்டதை அதன் யதார்த்தத்தை சேரன் புதிய படிமங்களுடன் எமக்குள் இறக்குகின்றார்.
“………….”ஃ பிறகு? ஃ பிறகென்ன? ஃ எல்லாம் வழமைப்படி ஃ காலை வெறும் சூரியன் ஃ வெய்யில்  நிலத்தில் ஃ எனக்கு மேல் ஃ  புல்” 3
என்று மிகச் சாதாரணமாக மரணத்தை அதிர்ச்சியூட்டும் விதத்தில் எழுதிவிடுகின்றார். வேறொரு கவிதையில்இ ‘இரத்தம் சிந்திய நிலங்களின் மீது ஃ  நெல் விளைகிறது! சணல் பூக்கிறது ஃ  மழை பெய்கிறது’4    என்கிறார். இதற்கு மேல் இன்னும் ஒருபடி மேலே போய்இ “நாங்கள் உயிர்வாழ்வதற்கான ஃ நிகழ்தகவு ஃஅச்சந்தரும் வகையில் ஃ
குறைந்து போய்விட்டது”5        என்று பதிவு செய்கின்றார். சேரன் அக்காலத்தை வெறுமனே பதிவு செய்தவராக மாத்திரம் இருக்கவில்லை. ஒரு இடத்தில் தனித்து நின்றுவிட்டவரும் இல்லை.  “ஈழத்துப் போர் குறித்து எழுதப்பட்ட ஏராளமான கவிதைகளுக்குப் போர் ஆவணங்கள்இ காலப்பதிவுகள் என்ற முக்கியத்துவம் மட்டும்தான் உள்ளது என்று இப்போது தோன்றுகிறது”6.  என்று ஜெயமோகன் குறிப்பிடுகிறார். ஆனால் அதையும் மீறி சொல்முறைகளின் படிமங்களும்இ புதுமைகளும் அக்கவிதைகளை கனப்படுத்துகின்றன.
“இரவுகளில்ஃஅநேகமாக எல்லோரும்ஃபயங்கரமான கனவுகளைக் ஃகாண்கிறார்கள் ஃஅவற்றில் ஃ ஹெலிகொப்டர்கள்ஃ தலைகீழாகப் பறக்கின்றனஃ கவச வாகனங்கள்ஃ குழந்தைகளுக்கு மேலாகச்ஃசெல்கின்றன.ஃ நமது சிறுவர்கள்ஃ கடதாசியில் துப்பாக்கி செய்துஃ விளையாடுகின்றார்கள்.”7 என்பதில் வரும் படிமங்கள் முக்கியமானவை.
எனது நிலம் என்று ஓங்கி ஒலித்தும்இ மரணங்கள் கண்டு துவண்டும்இ புரட்சிக்காய் அறைகூவியும் நின்ற சேரனிடம் மனிதநேயமும்இ சமூகவிமர்சனங்களும் அடிச்சரடாய் ஓடிக்கொண்டிருந்தன.  ‘என் கவிதை தொடங்குகிறதுஃ கண்ணீரிலும் இரத்தத்திலும்ஃ கரைகிற வாழ்க்கையில் இருந்து’8 என்று கூறிய சேரன் வெறும் புரட்சி அழைப்போடு சுருங்கிவிடாதுஇ 1990களில் தமிழ்த்தேசியத்தின் மோசமான பக்கங்களையும் மிகத்துணிவோடு சாடினார். போருக்கு அழைத்த அதே சேரன்இ ‘வெற்று வார்த்தைப்பந்தலிலே உம் நினைவைச் சோடித்துத் தெருத் தெருவாய்ப் பாடி வைத்த பரணியெல்லாம் செத்த வீட்டு வாசலிலே வெட்டி இட்ட வாழைகளாய் நாலாம் நாள் உதிர்கிறது ஞாபகமும் உதிர்கிறது’9 என்று பாட நேர்கிறது. அதன் உச்சமாய்இ
 ‘கறைபடியாக் கரங்களெனத் திக்கெட்டும் பறையறைந்து கவிசொன்ன என் வாய்க்குச் செருப்படி’10 என்று பாடி நிற்கின்றது. ‘எம் பரம்பரை போர் புரியட்டும் ‘ என்று சொன்ன அதே சேரன் போராளிக் குழந்தைகளைக் கண்டு மனம் பதறுகிறார். இதை ஜெயமோகன்இ ‘சாம்பல் பூத்த தெருக்களில் இருந்து எழுந்து வருவதற்கு அறை கூவிய சிறுவன் ஒரு தந்தையாக மாறிவிட்டிருக்கிறான்’11 என்று  குறிப்பிடுவது முக்கியமானது. இது சூழலின் மாற்றத்தையும்இ சேரனின் அரசியல் கருத்துநிலை மாற்றத்தையும்இ பதிவு செய்கின்றது.
3.2 சேரனின் கவிதைகளில் சமூக நோக்கு 
சேரனிடம் வெளிப்படும் சமூக சிந்தனைகள் மிக முக்கியமானவை. பெண்களின் நூற்றாண்டாய்த் தொடரும் துயரையும்இ சாதிப்பிரச்சனைகள்இ சுரண்டல்கள்இ எல்லாம் சேர்ந்த ஒரு மனித நேயக் குரலை சேரனின் கவிதைகளில் காணமுடிகிறது. சாதி என்ற பெயரில் மனிதனை மனிதன் அடக்கும் தமிழரின் சாதி     வெறியை மிகவும் உக்கிரமாக சேரன் எதிர்த்தார். ‘முதுகு நாண் கலங்கள் மீது     பூஞ்சண வலைகளாய் சாதிப்பிரிவினை’ பின்னி இருப்பதைக் கண்டுஇ கொதித்து ‘நிர்வாணமாகத் தமிழர் எல்லோரும் தெருக்களில் திரிக’12 என்று சபித்தார்.  கூலிப்பெண்களின் சேற்றுக்குள் இறங்கும் வாழ்க்கை அவர்களுக்கு சேறையும் மற்றவர்களுக்கு சந்தனத்தையும் பூசுவது கண்டு ‘இவர்களது பூமி இருள் தின்னும்இ பொழுது விடிந்தாலும்’13 என்று இரங்குகின்றார்.  சமூகத்தின்  மூடநம்பிக்கைகளும் சீதனமும் ஒரு பெண்ணை முதிர்கன்னியாக்குவதைஇ  “காத்திருஃ உனக்காய் இவர்களனைவரும் ஃ கொண்டுவருவர்.ஃ’ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் ஃபொன்னிற இறகுகள்ஃ தலையில் மினுங்கும் ஃதூயசத்திரியனை’ஃ  பார்த்திரு ஃ உனது கூந்தல் வெளுத்த ஃ  பின்பும் கூட’14 என்று கோபத்தோடு சொல்லுகிறார்.
3.3 சேரனின் கவிதைகளில் காதலும் காமமும்
சேரனின் கவிதைகளில் முக்கிய பங்கினைக் காதலும் காமமும் பெற்றுக் கொள்கின்றன. போர் வெடித்த சூழலிலும்இ புலம்பெயர்ந்த நேரத்திலும் சேரனின் உள்நின்று சுடரும் ஒன்றாய்க் காதலும் காமமும் தீவிரம் பெறுகின்றன. தன்னிடம் வெளிப்படும் புரட்சியை எப்படி தீவிரமாக சேரன் வெளிப்படுத்தினாரோ அவ்வாறே காதல்இ காமத்தையும் வெளிக்காட்டினார்.  ‘காதல்இ காமம்இ சுகிப்புஇ இன்பம் துய்த்தல் என்று வருகிறபோது ….எமக்கு நாமே பூட்டிக் கொண்டிருக்கும் ஒழுக்கத்தளைகளும் மரபுஇ பண்பாடு என்பவற்றின் பிழையான போலித்தனமான புரிந்து கொள்ளல்களுக்கூடாக எமது சமூகங்கள் கட்டமைத்து வைத்திருக்கிற மாபெரும் ஒழுக்கச்சிறைகளும் உவப்பானவையல்ல.’15  என்று இதற்கு விளக்கம் கூறினார்.  ‘உன் நினைவில் வருகிறதா அந்த மழைநாள்’ என்ற நினைவுக் கிளர்தலிலும் ‘என் சின்னப்பெண்ணே எமது அன்றைய சூரியன் அன்றே மறைந்து போயிற்று’ என்று இறந்த காலத்தின் காதலியினையும்இ நீளக்காலூன்றி ஒரு கொக்காய் தவமிருத்தலையும்இ தன்னை வருட அவள் விரல்கள் இல்லையாகிவிட்டபோது நடுவழியில் திசையறியாப் பறவையாகிவிடுவதையும்இ காதலின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டபோது மனதில் கிளை விரித்திருந்த மரங்களுக்கு இலை உதிர்ந்து விடுவதையும்இ ‘துயரத்தின் சாறு பிழிந்த தனிமை எப்படியிருக்கும் என்பதை என் பனிப்பாறையுள் நெருப்பின் உயிர்ச்சுவட்டை எறிந்தவளிடம்’16என்று துயரினை க் கிளர்த்தும் காதலினையும்இ வயது ஏறிய பின்இ பெரும் போகத்தில் திளைத்தலைஇ ஆடையற்ற முதுகில் எழுதிய முத்தத்தின் காயங்களைஇ அவளும் தானும் இருந்த அறை அவள் போனது நூற்றுக்கணக்கான அறைகளில் ஒன்றாக நிறமற்றுப்போய்விடுவதைஇ கோபத்துடன் கல்வி செய்த அன்று:
‘ஒரே நேரத்தில் மரணதொலைவுஃமுடிவற்ற இன்பம்ஃ முடிவற்ற துயரம்ஃஎல்லாவற்றுக்கும் நெருக்கமாக இருந்தோம்’17 என்றும் இன்னும் இன்னும் பாடுகிறார்.  ஆரம்பகாலக் காதல்கவிதைகளைவிட பிரசவக்கோடுகளைத் தடவும் விரல்களில் இருந்து எழுந்து வரும் கவிதைகள் தீவிரம் உடையதாக விளங்குவதைக் காணலாம்.   ‘மதுவில்  நனைந்த ஆடையைக் கழற்றத்  ஃதனியிடம் தேவையா உனக்கு? ஃசதுக்கத்தின் நடுவில் கழற்றிவீசு ஃதங்கக்காசால் உன்னை மறைப்பேன்’18
என்னும் சேரன் குரல் காமத்தின் தீவிர குரலாகிவிடுகிறது.
3.4 சேரனின் கவிதைகளில் புகலிட அனுபவங்கள்
1980களுக்குப் பிறகு கிளைத்த கவிமரபின் அடுத்த கட்டமான புலம்பெயர் கவிதைகளிலும் சேரனின் கவிதைகள் இணைந்து கொள்கின்றன. அங்கு அவரது குரல் நிலமற்ற சோகத்திலும்இ நிலத்தின் நினைவு நிரம்பிய மதுக் கிண்ணத்தோடும்இ நிறப்பாகுபாட்டின் அவலத்தோடும் ஒலிப்பதைக் காணலாம்.
‘….ஊர்ஃநிலையற்றுத் தவித்து என்னைத் தூக்கி வெளியே வீசியது’19 என்று தான் புலம்பெயர்க்கப்பட்டதைக் கூறிஇ ஒளி வராத பனிபாலையில் தான் தஞ்சமாகியதைக் கூறுகிறார். அங்கு ‘மரங்களற்ற வெள்ளைப் பனிக்காட்டில் தனித்தேன்’ என்றும் ‘இப்போதோ நான் தனித்த அசோகமரம்’ என்றும்இ ‘பனிப்பாறை தனித்தீவுக் குளிர்நாளில் எனக்கென்ன எதிர்காலம்?’ என்றும் புகலிடத்தனிமையிலும் விரக்தியிலும் கவிதை ஒலிப்பதைக் காண்கிறோம்.. காரணமற்ற நியாயமற்ற மரணங்கள் கண்டு ‘சாம்பல் பூத்த தெருக்களில் இருந்து எழுந்து வருக’ என்று அறை கூவிய குரல் இப்போதுஇ 
‘கேட்டுக் கவலையுற்றுத் துன்புறுவோம் ஃ பின்னர் வழமைப்படிஇ என்புருக்கும் ஃபனிக்குளிரில் ஃஇறங்கிப் போய்விடுவோம் வேலைக்குஃ பொழுதில்லை அழுவதற்கும்’20  என்று ஆகிவிடுவதையும் உணர்த்துகிறார்.
இவ்வாறு சேரனின் கவிதைகள் பல தளங்களிலும்இ தடங்களிலும் ஓயாது இயங்குவதைக் காணலாம். ஓவ்வொன்றின் வெளிப்பாட்டிலும் வடிவநேர்த்தியும்இ புதுமையும்இ மொழியாற்றலின் வீச்சும்இ படிமத்தின் ஆழமும் மிக கலாபூர்வமாக வெளிப்படுகின்றன. இவற்றைத் தீவிரமாக மதிப்பிட இச்சிறு கட்டுரை இடமளிக்காது  காட்டப்பட்ட உதாரணங்கள் சேரனின் கலாபூர்வத்தையும் அழகியல் பெறுமானத்தையும் ஓரளவிற்கேனும் எடுத்தியம்பவல்லன.

4.முடிவுரை
சாம்பல் பூத்த தெருக்களில் இருந்து இன்று மரங்களற்ற பனிக்காடு வரைக்கும் விசாலித்து பயணம் செய்யும் சேரனின் கவிதைகள் ஈழத்துத் தமிழ்க்கவிதை மரபில் மாத்திரமன்றி தமிழ்க்கவிதை மரபிலும் தனியிடத்தைப் பெறுவன. சேரனே ஒரு கவிதையில் சொல்வது போல்இ
‘எனது கவிதை சிக்கலற்றது ஃ ஆழமான உணர்ச்சிச் சுழிப்புகளில் ஃ அது தன்னுடைய ஆழத்தை இழக்கவில்லை’21
என்பது உண்மையானது ஆகும். சேரனில் கருத்து மற்றும் கவித்துவ தொடர்ச்சியைஇ வளர்ச்சியைக் காணமுடிகின்றது. ‘என்னுடைய முழுக்கவிதைகளையும் எப்போதாவது எழுதி முடிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை’ என்று சேரன் சொல்லுகிறார். ஆனால் அவர் இதுவரை எழுதிய கவிதைகளே அவரை பெரும் கவிஞனாய் வாழவைக்கும் தகுதி கொண்டவை. ஈழத்துத் தமிழ்க் கவிதையை தனித்துவப்படுத்திய முன்னோடிக் கவிஞர்களில் சேரனும் ஒருவர் என்பது ‘உண்மைஇ வெறும் புகழ்ச்சியில்லை.”

அடிக்குறிப்புகள்
1.    சேரன்இ (ஆகஸ்ட் 2000) நீ இப்பொழுது இறங்கும் ஆறு  - சேரன் கவிதைகள் ஒரு நூறுஇ காலச்சுவடுஇ பக்கம் 79
2.    மேற்படிஇ பக்கம் 69
3.    மேற்படிஇ பக்கம் 38
4.    மேற்படிஇ பக்கம்
5.    மேற்படிஇ பக்கம் 94
6.    ஜெயமோகன்இ(2010) இரத்தம் காமம் கவிதை - சேரனின் கவியுலகுஇ ஜெயமோகனின் இணையத்தளம்
7.    நீ இப்பொழுது இறங்கும் ஆறு  - சேரன் கவிதைகள் ஒரு நூறுஇ பக்கம் 95
8.    மேற்படி பக்கம் 154
9.    மேற்படி பக்கம் 184
10.    மேற்படி பக்கம் 118
11.    ஜெயமோகன்இ இரத்தம் காமம் கவிதை - சேரனின் கவியுலகுஇ றறற.தநலயஅழாயn.in
12.    நீ இப்பொழுது இறங்கும் ஆறு  - சேரன் கவிதைகள் ஒரு நூறுஇ பக்கம் 39
13.    மேற்படி பக்கம் 33
14.    மேற்படி பக்கம் 51
15.    சேரன் நேர்காணல்கள் இகடவுளும்இ பிசாசும்இ கவிஞனும் (டிசம்பர் 2006)    காலச்சுவடு பதிப்பகம் பக்கம் 33
16.    நீ இப்பொழுது இறங்கும் ஆறு  - சேரன் கவிதைகள் ஒரு நூறுஇ பக்கம்185
17.    சேரன்இ மீண்டும் கடலுக்குஇ( டிசம்பர் 2004 ) காலச்சுவடு பக்கம் 32
18.    மேற்படி பக்கம் 72
19.    மேற்படி பக்கம்  40
20.    மேற்படி பக்கம் 54
21.    நீ இப்பொழுது இறங்கும் ஆறு  - சேரன் கவிதைகள் ஒரு நூறுஇ பக்கம்196